- Advertisement -
ஊழல் வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தனன், வழக்கறிஞர் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் விவாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று (செப்.5) தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பைத் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -