- Advertisement -
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் கே. சாமிதுரை (வயது 91) நேற்று (ஆக.30) உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு இன்று (31.08.2023) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மகனும், கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான திரு. எஸ். மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “எளிய பின்புலத்தில் பிறந்து கடும் உழைப்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சட்டத்தின் துணையுடன் சமூகநீதியை நிலைநாட்டியவர் சாமிதுரை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
- Advertisement -