- Advertisement -
ஒரு கொப்பரைத் தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வாங்கிய கொப்பரைத் தேங்காயைச் சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். அல்லது அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு இதே போலச் சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம்.
மேலும், அதற்குள் நீங்கள் பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி, கடுக்காய், குண்டு மஞ்சள் போன்ற பொருட்களைப் போட்டும் வைக்கலாம்.கல்லாப்பெட்டி, பீரோ அல்லது பூஜை அறை போன்ற இடங்களில் இதனை வைத்து வந்தால் இழந்த பணம், பொருள் சொத்து திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை
- Advertisement -