- Advertisement -
ஆன்மீக ரீதியாக எந்த ஒரு பொருளையும் பன்மடங்காகப் பெருக்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் முழுமையாகப் பன்னீர் ஊற்றி, சிறிதளவு மஞ்சள் பொடியைச் சேர்த்து, ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் போட்டு நீங்கள் சொந்த தொழில் செய்யும் இடமாக இருந்தால் அங்குப் பூஜை அறையில் வைத்து விடலாம்.
ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால், உங்களது அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, உங்களது மேஜையின் மேல் இதை வைத்துக் கொள்ளலாம். வீட்டில் செல்வச் செழிப்பு தேவை என்பவர்கள் வீட்டிலும் பூஜையறையில் இதை வைத்துக் கொள்ளலாம். இந்த வாசமே உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை உண்டாகும். வெற்றிக்கான வழிகள் தானாகவே பிறக்கும்.
- Advertisement -