- Advertisement -
ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதைப்போல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவன், பயிற்சி நிறுவன மாடியிலிருந்து குதித்தும், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவன் தனது அறையில் தூக்கிட்டும் தற்கொலை செய்யும் சம்பவம் அடுத்தடுத்து நடைபெறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது
இந்நிலையில், இந்த நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கோலோச்சும் கோட்டா நகரில், இந்த ஆண்டில் மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இப்படித் தொடர் தற்கொலைகளால் பயிற்சி நிறுவனங்கள் 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது, மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் எனக் கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவு
- Advertisement -