- Advertisement -
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரெதிபோட்கி கிராம மக்கள் 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில், தாஜ்புரா பகுதி அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -