- Advertisement -
குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஆக.23) பகல் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், புரோமின் வாயு கசிந்துள்ளது.
இதனால், அந்த வாயு காற்றில் வேகமாக பரவியதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் மற்றும் இதைச் சுவாசித்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வாயுவைச் சுவாசித்ததில் சுமார் 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து நேர்ந்தது குறித்து தீவிர விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.
- Advertisement -