- Advertisement -
கடந்த வாரங்களில் இமாச்சலில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதில், குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். அதைப்போல், சிலர் தங்களது உயிரையும் இந்த வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவால் இழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ.862 கோடி நிவாரண நிதி ஒதுக்கி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் சற்றுமுன் கூறியுள்ளார்.
மேலும், அம்மாநில முதல்வர் ரூ.8,000 கோடி நிதி உதவி ஒன்றிய அரசிடம் கேட்டிருந்த நிலையில், சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூ.862 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
- Advertisement -