- Advertisement -
நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று (ஆக .23) மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் நிகழ்வை மாலை 5:20 முதல் இஸ்ரோ நேரலை செய்ய இருக்கிறது.
இந்நிலையில், தற்போது பிரிக்ஸ் மாநாட்டிற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் இணைய வழி மூலமாகப் பங்கேற்க இருக்கிறார். இது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும்.
- Advertisement -