- Advertisement -
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது அல்ல, இந்தியாவிற்குச் சொந்தமானது. சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை”. என்றார்.
மேலும், அவர் ” இந்த சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தை அடைய தற்போது நெருங்கி வரும் நிலையில், அதன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்காக அனைவரும் ஒன்றாக நின்று உற்சாகப்படுத்த வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -