- Advertisement -
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து சில தினங்களுக்கு முன் பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தை ஆராய வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய முதல் நாடாக இந்தியா உள்ளது.
மேலும், இந்த லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்க வேண்டி இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள், மற்றும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதைப்போல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளிலும் 5 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டதாக சற்றுமுன் தகவல் வந்தது
- Advertisement -