- Advertisement -
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அப்பகுதியில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கிப் பலியான மக்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆக உயர்ந்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
மேலும், இந்த தீவில் உள்ள சுமார் 15,000 கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமான 1,300 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது என்றும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- Advertisement -