- Advertisement -
இங்கிலாந்து நாட்டில் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளிலும், புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களைப் பொறிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த 2023க்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
- Advertisement -