- Advertisement -
தமிழக ஆளுநரின் சுதந்திர தின விழா முன்னிட்டு வழங்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புறக்கணித்துள்ளார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், அவர் “மக்கள் நலன், வளர்ச்சிக்காகச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். முக்கிய சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் வைத்துள்ளதைக் கண்டித்து, தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என அறிவித்துள்ளார்.
- Advertisement -