- Advertisement -
சில தினங்களுக்கு முன் மீண்டும் காங்கிரஸ் எம்பியான பின் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அதன்படி, நாளை (ஆக. 12) உதகை வருகிறார். இவர் டெல்லியிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் நாளை பகல் 1 மணிக்கு உதகை அருகே முத்தநாடு மந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அவர்களோடு கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து, கூடலூர் வழியாக அவரது தொகுதியான வயநாடு செல்கிறார். இந்நிலையில், மீண்டும் எம்.பி ஆன பின் வரும் ராகுல் காந்தியின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -