- Advertisement -
ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் இன்றும் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ” கடந்த 9 ஆண்டுகள், நமது அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் உயர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்து வருகின்றன” எனக் கூறினார்.
மேலும், அவர் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசே காரணம். கோவிட் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு கட்டிக் கொடுப்பதால் நிதிச்சுமை இல்லை. தமிழ்நாட்டைப் பற்றி நான் பேச நிறைய இருக்கிறது. இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்குத் தமிழ்நாடு அரசே காரணம் எனக் கூறினார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
- Advertisement -