- Advertisement -
மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த தீர்மானம் குறித்து ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் காரசார விவாதம் நடத்தினர். இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற பிரதமர் மோடி இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துப் பதிலளிப்பார் எனத் தகவல் வந்தது.
ஆனால், இன்று (ஆக .10) நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் மோடி வராதது பற்றி மாநிலங்களவையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, “அவர் இன்று வருவார், எதிர்க்கட்சியைக் கிழிக்கப் போகிறார்” என பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பவே, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் ” மோடி என்ன பரமாத்மாவா, கடவுளா? வரட்டும், பார்த்துக் கொள்கிறோம்” என ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.
- Advertisement -