- Advertisement -
காங்கிரஸ் எம் .பி ராகுல் காந்தி அவர்கள் சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களைச் சந்தித்து கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ராகுல் காந்தி 2வது நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், ” குஜராத் மாநிலத்திலிருந்து மேகலாயா வரை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கும்போது, நாங்களும் மகாராஷ்டிராவில் நடைப்பயணம் தொடங்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
- Advertisement -