- Advertisement -
உலகில் அதிகளவு மக்கள் போக்குவரத்திற்கு ரயிலில் பயணிக்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் சில ரயில்கள் தடம் புரண்டும், விபத்துகுள்ளாகியும் இருக்கிறது. அதில் பல உயிர் இழப்பு சம்பவம் நேர்கிறது. அந்த வகையில், கிழக்கு ஸ்வீடனில் சுமார் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்தானது.
இந்நிலையில், இந்த மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது என முதல்கட்ட தகவல் வந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றபடி யாருக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
- Advertisement -