- Advertisement -
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, ஊழல் வழக்கில் கடந்த சனிக்கிழமையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இதனால் அவரை காவல்துறை கைது செய்து தற்போது அட்டக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த அட்டக் சிறையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அவரை அடியாலா சிறைக்கு மாற்றவும், குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க அனுமதிக்கவும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -