- Advertisement -
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடத்தில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அந்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதிலும், குறிப்பாகப் பெண்களுக்குப் பல வரைமுறைகளை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் 3ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கத் தடை விதித்துள்ளது அந்நாட்டு தாலிபான் அரசு. ஏற்கனவே, அந்த நாட்டில் அழகு நிலையங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றிற்குச் செல்லப் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிறுமிகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -