- Advertisement -
அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களைக் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமைகளில் பணியில் தவறுகள் செய்வதாகவும், சுறுசுறுப்பு இன்றியும் இருப்பதாக டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் புதிய தகவல் வெளியிட்டது.
ஏனென்றால், வெள்ளிக்கிழமையின் அடுத்த இரு நாளுக்கு விடுமுறை வருவதால் பலரும் அந்த நாளை சோம்பலாகவே வேலை பார்ப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இங்குள்ள ஊழியர்களின் டைப்பிங் வேகம், எழுத்துப்பிழைகள், Mouse-ஐ நகர்த்தும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதில் சற்றும் எதிர்பாராத விதமாக இந்த தகவல் ஆய்வின் முடிவில் வெளிவந்ததாகத் தெரிவித்தனர்.
- Advertisement -