- Advertisement -
ஆண்களுக்குத் திருமணம் விரைவில் நடக்க வியாழக்கிழமை காலை குளிக்கும் நீரில் (பக்கெட்டில்) சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு சிறிய குங்குமப்பூ இரண்டையும் கலந்து அந்த நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 11 வியாழக்கிழமை செய்யத் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்கச் செல்லும் போது புதிய துணி அணிந்து செல்ல திருமண தோஷம் நீங்கி வரன் அமையும்
மேலும், நீங்கள் பச்சரிசி(200 கி) பாசிப்பருப்பு(200 கி) ஊறவைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை(200 கி) கலந்து அதனுடன் அகத்திக் கீரை கட்டு சிறியது கலந்து பசு மாட்டுக்கு உங்கள் கையாலே கொடுக்க வேண்டும் இதை வியாழக்கிழமை காலை குளித்து விட்டு தலையில் ஈரம் இல்லாமல் செய்ய வேண்டும். நாம் கொடுக்கும் பாத்திரத்தில் தண்ணீர் மீதம் வரக்கூடாது வந்தால் அதை நீங்கள் குடியுங்கள்.இதைச் செய்யும் போது பெண்கள் தலையில் பூச்சூடக்கூடாது. மேலும், நீங்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடத் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்
- Advertisement -