- Advertisement -
மணிப்பூரில் கள ஆய்வு நேரடியாகச் சென்று நடத்திய இந்தியக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிகள் இது குறித்த அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். அதன்படி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை இன்று (ஆகஸ்ட் 2) சந்தித்தனர்.
இந்நிலையில், இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எங்களது கருத்துகளைக் கேட்டார். பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தைக் குறித்து எந்த உறுதியையும் அளிக்கவில்லை” என்றார்.
- Advertisement -