- Advertisement -
நெய்வேலியில் கடந்த சில தினங்களுக்கு NLC நிறுவனத்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் பயறுகளை ட்ராக்டர் வைத்துச் சேதப்படுத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, ” நெய்வேலியில் NLC நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக, ஏக்கருக்கு 40,000 வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அவர் “10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்க NLC நிறுவனம் தவறிவிட்டது. அதில் பயிரிட்டது விவசாயிகளின் தவறு. இரு தரப்பும் 50:50 பொறுப்பாவார்கள். ஆகவே, இனி கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்த விவசாயப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படிச் செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்
- Advertisement -