- Advertisement -
வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (ஆகஸ்ட் 1) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் உள்ள சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும், மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- Advertisement -