தமிழ்நாடு அரசின் கீழ் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதியில் 24 மணி நேரப் பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி எனப் பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம். இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள 94999 88009 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம். மேலும் , www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களைக் காணலாம்.
- Advertisement -