நெய்வேலி விவசாயி நிலத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி செய்யக்கூடாது என அங்குள்ள விவசாயிகள் தெரிவித்து வரும் நிலையில், இங்கு என்எல்சி நெய்வேலியிருந்து வெளியேறவும், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் பாமக சார்பில் நாளை (ஜூலை 28) முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, “மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், உணவுக்கு நிலம் முக்கியம். விளைந்த நெற்பயிர்கள் மீது பொக்லைன் இறக்கி வாய்க்கால் வெட்டுவதைக் கண்டித்து போராட்டம் நடக்கும்” என்றார்.
- Advertisement -