மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இணையத்தில் நாடே கொதித்தெழுந்தது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராக்க, காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிச்செயல்களை தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்” என்றார்.
மேலும், அவர் ” இப்படி அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து, அவற்றை வீரதீர செயல்கள் எனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டம் அடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சம்” எனக் கூறி இந்த சம்பவம் குறித்து தனது காட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
- Advertisement -