இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங் இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக இன்றும் , நாளையும் மேற்கொள்கிறார். இந்நிலையில், இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வலியுறுத்தப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்” எனக் கூறிருப்பதாகத் தெரிவித்தார்
- Advertisement -