தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதால் , அங்குள்ள ஏரிகளில் நீர் நிரம்பி சாலைகள் முழுவதும் வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது வடமேற்கு வங்கக்கடல் பகுதியின் ஒடிசா கடற்கரையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -