மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினர்க்கிடையே பயங்கர வன்முறை வெடித்து வரும் நிலையில், நேற்று மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடி பெண்கள் 2 பேரைச் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் செய்த காணொளி இணையத்தில் வெளியானது. அதற்குப் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த மணிப்பூர் கலவரம் குறித்து நடவடிக்கை எடுக்கப் பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அவர்கள், “நீங்கள் இந்தியாவின் பிரதமர். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி, குக்கி பெண்கள் இந்தியாவின் மகள்கள், சகோதரிகள். இந்த ‘பாரதத்தின்’ மீதுள்ள அன்புக்காக உங்கள் மௌனத்தைக் கைவிடுங்கள். ஒரு முறையாவது சரியானதைச் செய்யுங்கள்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
- Advertisement -