தற்போது நடந்துகொண்டிருக்கும் மணிப்பூர் கலவரத்தைக் குறித்து இம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ” கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இருப்பினும், ஆங்காங்கே துப்பாக்கிச்சூடும், கலவரங்களும் தொடர்கின்றன. பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்” என்றார்.
மேலும், அவர் ” இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்காணிக்க காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 126 சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த கலவரத்தில் தொடர்புடைய 452 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப மக்களின் ஒத்துழைப்பு தேவை” என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
- Advertisement -