அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று முன் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்பட்ட போது, அமைச்சரைக் கைது செய்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் -ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறைக்குச் சென்றார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அங்கு அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -