கோவை மாவட்டத்தில் உள்ள அட்டமலை வனப் பகுதியில் சுமார் 1.5 வயது உடைய பெண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இந்த இறப்பு குறித்து பிரேதப் பரிசோதனை நடத்திய பின் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் முன்னிலையில் இந்த பெண் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையில் காட்டில் உள்ள மற்ற விலங்குடன் ஏற்பட்ட மோதலின் போது சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -