தமிழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால், திடீர் ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அதேசமயம், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துறை சட்டவிரோதமாகக் கைது செய்ததாக ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் கைது செய்தது சரியே என்றும் , இவரைக் காவல் எடுத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சற்று முன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அங்கிருந்து, அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -