அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். பின்னர், இரு பேர் கொண்ட நீதிபதி அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இதில், முதல் நீதிபதி இந்த கைது சட்டவிரோதமானது என்றார், இரண்டாவது நீதிபதி இந்த கைது செல்லும் என மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கைக் கடந்த சில தினங்களாக விசாரித்த 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அவர்கள் ” அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் ” இந்த மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகளின் அமர்வில், கைதுக்குத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணங்கள் சீராக உள்ளன” எனத் தெரிவித்தார்
- Advertisement -