சென்னையில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் செயல்படத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால், பெரும் மக்கள் அலுவலகத்தில் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், அவர்களால் ஓட்டுநர் உரிமம் பெற வார நாட்களில் வர முடியவில்லை என அரசுக்குத் தொடர் புகார் வந்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது இந்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகப் பல விண்ணப்பங்கள் காத்திருப்பதாலும், அலுவலகத்துக்குச் செல்வோர் விடுமுறை நாள்களில் ஓட்டுநர் உரிமம் பெற வசதியாகவும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- Advertisement -