கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள சாலையில் வழக்கம் போலச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாகப் பயங்கர தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அந்த காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டது.
- Advertisement -