டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காகச் சேலம் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று (ஜூலை 3) 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அணைக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு , ”காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக” சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
- Advertisement -