இன்று சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் ” இனி “எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்குக் கற்பித்து விட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தைத் தொண்டர்களாகிய உங்களுக்கு அளிக்கிறேன்” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
மேலும், அவர் ”எந்த சூழல் வந்தாலும் என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் தான் என்னுடைய மன தைரியம், மன வலிமை” எனத் தொண்டர்கள் குறித்தும் நம்பிக்கையாகப் பேசினார்
- Advertisement -