தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த வெ.இறையன்பு, தலைமை டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் இன்றுடன் (ஜூன் 30) ஓய்வு பெறுகின்றனர். இதை முன்னிட்டு இவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் சால்வை அணிவித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தார். மேலும், இன்று புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனாவும், புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலும் பதவியேற்க உள்ளனர்.
- Advertisement -