தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல் வழங்க ஆசிரியர்களை நியமிக்கப் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அந்த ஆசிரியர்கள், மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தார் போல் மாணவர்களுக்குப் பல ஆலோசனைகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -