தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், இந்த 2023 -2024 ஆம் கல்வியாண்டில் பயலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளில் இனி மாலை நேர வகுப்புகள் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இது அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அந்தந்த வகுப்புகளில் பாடச் சம்பந்தமான சந்தேகங்களுக்கு இந்த மாலை நேர வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -