தமிழகத்தில் முழுவதும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, பின்னாடி உட்காருவரும் பாதுகாப்பு கருதி தலைக்கவசம் அணியலாம் எனத் தமிழக அரசு பொதுமக்களிடம் தெரிவித்திருந்தது
இந்நிலையில், கோவையில் வரும் ஜூன் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் எனக் கோவை மாநகர போலீசார் சற்றுமுன் அறிவித்துள்ளனர். ஏனென்றால், கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்துகளால் கோவை மாநகரில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக் கவசம் அணியவில்லை என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
- Advertisement -