தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பிரத்யேக செயலி (TNSED) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செயலி மூலம் வருகைப்பதிவு அப்டேட் செய்யப்பட்டு வருவதால், பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களின் செல்போனுக்கு நேரடியாகக் குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -