தமிழகத்தில் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி அவர்கள் அடிக்கடி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் என்று குறிப்பிட்டுப் பேசி வருவதைக் குறித்து, இந்த சனாதன தர்மம் என்றால் என்ன? உட்பட 18 கேள்விக்குப் பதில் கேட்டு RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார்.
ஆனால், தற்போது வரை இந்த அனுப்பட்ட மனுவிற்கு எந்த பதிலும் ஆளுநர் தரப்பிலிருந்து அளிக்கப்படாததால் இந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் அளித்த மனுவை மீண்டும் பரிசீலித்து பதில் அனுப்புமாறு ஆளுநர் செயலருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -