நேற்று (ஜூன் 12) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழ்நாடு ஊழல் மாநிலமாக இருப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் காரணம்” எனக் கூறிருந்தார். இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலைக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களும் ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவைக் குற்றச்சாட்டியதற்கு, “1998ம் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. இன்றைய பிரதமர் மோடியும் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசுவது கண்டனத்திற்குரியது” எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
- Advertisement -