சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது 19வது முறையாகும். இதன்மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியது.
- Advertisement -