இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் , வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கவே திணறி வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு முடிவுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 4G மற்றும் 5G சேவையை வழங்கும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (ஜூன் 8) 4G மற்றும் 5G அலைக்கற்றையை BSNL நிறுவனத்திற்கு ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது மூன்றாவது மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, BSNL-க்கு ரூ. 89,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- Advertisement -